மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
திரைக்கதை ஜாம்பவான் பாக்யராஜின் மகன் சாந்தனுவுடன் நாயகியாக அறிமுகமானவர், சாந்தினி. அதன் பின் சினிமாவில் இருந்து காணாமல் போன அவர், தற்போது, அரை டஜன் படங்களுக்கு மேல் நடித்து வருகிறார். அவருடன் பேசியதிலிருந்து:
முதல் பட வாய்ப்பு எப்படி வந்தது?
கடந்த, 2008ல், சென்னை அழகி போட்டியில் இரண்டாவதாக வந்த என்னை பார்த்து, சித்து பிளஸ் 2 படத்திற்கு நாயகியாக தேர்ந்தெடுத்தனர். என் முதல் படமே சிறப்பாக அமைந்தது. சினிமாவுக்கான எந்த திட்டமும் இல்லை. அப்போது, பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன். பாக்யராஜ் சார் பார்த்து, என்னை அந்த படத்தில் நாயகியாக்கினார்.
அதன் பின் சினிமாவில் காணவில்லையே ஏன்?
முதல் படம் ஒப்பந்தமான போது, பிளஸ் 2 படித்துக் கொண்டிருந்தேன். அப்படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் போதே, எத்திராஜ் கல்லுாரியில் சேர்ந்தேன். முதலில் கல்லுாரி படிப்பை முடிக்க வேண்டும் என நினைத்தேன். அதனால், முதல் படத்தை தொடர்ந்து, உடனடியாக எந்த படத்திலும் நடிக்க ஒப்புக் கொள்ளவில்லை.
மீண்டும் சினிமாவுக்குள் நுழைந்தது எப்படி?
படிக்கும் போதே நிறைய, வெப் சீரியலில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால், அவற்றில் நடிக்க மறுத்து விட்டேன். சினிமாவில் நடிப்பதை மட்டுமே விரும்பினேன். கடந்த, 2015ல், வில் அம்பு படம் மூலம் தான், எனக்கு மீண்டும் சினிமா வாய்ப்பு கிடைத்தது. தற்போது சில படங்கள் வெளியீட்டுக்கு தயாராக உள்ளன. மேலும் சில படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன்.
உங்களது, ரோல் மாடல் யார்?
ஜோதிகா தான் என் ரோல் மாடல். சினிமாவிலும் சரி; சினிமாவுக்கு வெளியிலும் சரி; அவரை ரொம்ப பிடிக்கும். அவரைப்போல் சிறந்த நடிகையாக பெயரெடுக்க விரும்புகிறேன். கண்டிப்பாக, என் ஆசை நிறைவேறும் என நினைக்கிறேன்.
சினிமாவில் உங்கள் திட்டம்?
நல்ல படங்களில் பணியாற்ற வேண்டும். எல்லா நடிகர்களுடனும் நடிக்க வேண்டும். திரையுலகில் நல்ல நடிகை என பெயரெடுக்க வேண்டும்.
சினிமாவில் கவர்ச்சிக்கு நீங்கள் வகுத்துள்ள எல்லை எதுவரை?
கதைக்கு தேவையான கவர்ச்சி என்றால், நடித்து தானே ஆக வேண்டும். திரையில் பார்க்கும் போது, அருவெறுப்பு இல்லாமல், அனைவருக்கும் பிடிக்கும் வகையிலான கவர்ச்சியில் நடிப்பது தப்பில்லை. அதேநேரத்தில், அடல்ட் படத்தில் நடிப்பது எனக்கு உடன்பாடில்லை. எப்படி நடித்தாலும், தணிக்கை செய்து தானே அனுப்புகின்றனர். ரசிகர்கள் மத்தியில் பெயர் கெடாமல் இருந்தால் போதும்.
வெளியாகவுள்ள படங்கள் குறித்து?
ரிலீசுக்கு தயாராக, ராஜா ரங்குஸ்கி, வஞ்சகர் உலகம், சதுரங்க வேட்டை - 2 மற்றும் வணங்காமுடி, பில்லா பாண்டி ஆகிய படங்கள் உள்ளன. இதுதவிர, நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள சில படங்களிலும், நடித்து வருகிறேன்.