டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
ஹாலிவுட்டில் மிகவும், 'பிசி'யான நடிகையாகி விட்டார், பிரியங்கா சோப்ரா. அங்குள்ள முன்னணி நடிகையருக்கு சவால் விடும் வகையில், அவருக்கு வாய்ப்புகள் குவிகின்றன. இதனால், சில ஆண்டுகளாக, ஹிந்தி படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார். தவிர்க்க முடியாத வாய்ப்பை மட்டுமே அவர், ஒப்புக் கொண்டார்.
'இப்படியே போனால், பாலிவுட் ரசிகர்கள் உங்களை மறந்து விடுவர்' என, பாலிவுட் பிரபலங்கள், பிரியங்காவுக்கு அறிவுரை கூறியதை அடுத்து, அவரது மனது மாறியுள்ளது. விஷால் பரத்வாஜ் இயக்கத்தில், ஒரு புதிய படத்தில் நடிக்க சம்மதித்துள்ளார்.
'இந்த படத்துக்கு, பெரிய ஹீரோக்களை ஒப்பந்தம் செய்ய வேண்டாம். கதையும், அதில் என் கேரக்டரும் தான் முக்கியம். ஆண்டுக்கு ஒரு ஹிந்தி படத்தில் நடித்தாலும், அது, என் பெயரைச் சொல்லும் படமாக இருக்க வேண்டும். அப்படி ஒரு கதையை தயார் செய்யுங்கள்' என, இயக்குனரிடம் கூறியுள்ளார், பிரியங்கா. இதையடுத்து, வித்தியாசமான கதையை தயார் செய்யும் பணியில், முழுவீச்சில் இறங்கியுள்ளார், இயக்குனர் விஷால் பரத்வாஜ்.