தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பாலிவுட்டில் சமூக நோக்கிலான விஷயங்களை மையப்படுத்தி சூப்பர் ஹிட் படங்களாக கொடுத்து வருபவர் பிரபல இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி.. சில வருடங்களுக்கு முன் சர்ச்சைகளில் சிக்கி சரிந்து கிடந்த சஞ்சய் தத்தின் மார்க்கெட்டை, முன்னாபாய் எம்.பி.பி.எஸ்.மூலம் தூக்கி நிறுத்தியதும் இவர் தான், அமீர்கானின் இன்னொரு முகத்தை 3 இடியட்ஸ் மற்றும் பீகே மூலம் வெளிக்கொண்டு வந்தவரும் இவர்தான்..
தற்போது ரன்பீர் கபூரை வைத்து சஞ்சய் தத்தின் வாழ்க்கை வரலாறாக 'சஞ்சு' என்கிற படத்தை இயக்கிவரும் ராஜ்குமார் ஹிரானி, முன்னாபாய்' படத்தின் மூன்றாம் பாக வேலைகளை துவங்கிவிட்டதாக சில நாட்களுக்கு முன் அறிவித்தார். அதேசமயம் ரசிகர்களின் நீண்டநாள் எதிர்பார்ப்பாக உள்ள 3 இடியட்ஸ் படத்தின் இரண்டாம் பாகத்தையும் கட்டாயம் எடுக்கப்போவதாக அறிவித்துள்ளார் ராஜ்குமார் ஹிரானி. இதற்கான ஸ்கிரிப்ட்டை எழுத கதாசிரியர் அபிஜீத்துடன் கதைவிவாதம் நடத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.