'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் |
7 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த படம் அவன் இவன். பாலா இயக்கிய இந்தப் படத்தில் ஆர்யா, விஷால், ஜனனி அய்யர், மதுஷாலினி நடித்திருந்தனர். பாலா இயக்கி இருந்தார், கல்பாத்தி அகோரம் தயாரித்திருந்தார். இந்தப் படத்தில் நெல்லை மாவட்டத்தில் உள்ள சிங்கம்பட்டி ஜமீன் பற்றியும் மற்றும் காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவில் பற்றியும் தவறாக சித்தரித்திருப்பதாக கூறி சிங்கம்பட்டி ஜமீன் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அம்பாசமுத்திரம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு கடந்த சில ஆண்டுகளாக நடந்து வருகிறது. பலமுறை சம்மன் அனுப்பியும் இயக்குனர் பாலா, நடிகர் ஆர்யா மற்றும் தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரம் ஆகியோர் கோர்ட்டில் ஆஜராகவில்லை. கடந்த மாதம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது ஜூன் 20ந் தேதி சம்பந்தப்பட்டவர்கள் நேரில் ஆஜராக வேண்டும் இல்லாவிட்டால் கைது வாரண்ட்டு பிறப்பிக்கப்படும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து இயக்குனர் பாலா, நடிகர் ஆர்யா, தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரம் ஆகியோர் நேற்று அம்பாசமுத்திரம் கோர்ட்டில் ஆஜர் ஆனார்கள். அவர்களிடம் நீதிபதி விசாரணை நடத்தினார்.
"அவன் இவன் முழுக்க முழுக்க கற்பனை கதைதான் யாரையும் குறிப்பிட்டு எடுக்கவில்லை" என்று பாலா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பின்னர் மூவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் கொடுக்கப்பட்டது. வழக்கு விசாரணை இன்று மீண்டும் நடக்கிறது.