புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ |
தெலுங்கு சின்னத்திரை தொகுப்பாளினி தேஜஸ்வினி (வயது 25). தனது மாமியார் குடும்பத்துடன் கிருஷ்ணா மாவட்டத்தில் வசித்து வந்தார். கடந்த ஞாயிற்றுக் கிழமை தனது வீட்டில் படுக்கை அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த தகவல் திங்கள் கிழமைதான் வெளிவந்தது. போலீசார் தேஜஸ்வினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி விட்டு விசாரணையை தொடங்கி உள்ளனர். நேற்று தேஜஸ்வினி எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றினர்.
அந்த கடிதத்தில் தேஜஸ்வினியின் கணவருக்கு இன்னொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாகவும், கணவரின் மனரீதியான டார்ச்சர் தாங்க முடியாமல் தான் தற்கொலை செய்து கொள்வதாகவும் எழுதி வைத்திருந்தார். இதைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்திருப்பதாவது:
தேஜஸ்வினி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பவன்குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் வெவ்வேறு ஜாதியை சேர்ந்தவர்கள் என்பதால் பவன்குமார் குடும்பத்தினர் இவர்களின் காதலுக்கும், கல்யாணத்துக்கும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதனால் பதிவு திருமணம் செய்து கொண்ட இருவரும் துபாய் சென்று சில காலம் வாழ்ந்துள்ளனர். பின்னர் குடும்பத்தினர் மனம் மாறியதைத் தொடர்ந்து திரும்பி வந்துள்ளனர்.