'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சினிமாவில் எல்லா துறையிலும் பணியாற்றுகிறவர்களுக்கு அடிமனதில் இருக்கும் ஒரு ஆசை நடிப்பது தான். போஸ்டர் ஒட்டும் பையனிலிருந்து ஆர்ட் டைரக்டர் வரைக்கும் நடிக்க வந்து விட்டார்கள். சண்டை இயக்குனர்களில் சூப்பர் சுப்பராயன், திலீப் சுப்பராயன், ஜாக்குவார் தங்கம், தளபதி தினேஷ், கனல் கண்ணன், பெப்ஸி விஜயன் உள்பட பலர் நடிகர் ஆகிவிட்டார்கள்.
இந்த வரிசையில் இப்போது வந்திருக்கிறார் ஸ்டண்ட் சிவா. அவ்வப்போது சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த ஸ்டண்ட் சிவாவும் நடிகர் ஆகிவிட்டார். கடந்த 15 ஆண்டுகளாக மாஸ்டராக இருந்தவர் வேட்டையாடு விளையாடு படத்தில் சிறு கேரக்டரில் நடித்தார். அதன் பிறகு தற்போது கோலி சோடா படத்தில் முழு வில்லனாக நடித்திருக்கிறார். தொடர்ந்து நடிக்கவும் முடிவு செய்திருக்கிறார் இதுகுறித்து அவர் கூறியதாவது:
முதலில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் தான் சினிமாவுக்கு வந்தேன். ஆனால் ஸ்டண்ட் மேன் வாய்ப்பு தான் கிடைத்தது. கடந்த 15 ஆண்டுகளாக ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றி வருகிறேன். தமிழில் கமல்ஹாசன், விஜய், விக்ரம் ஆகியோருடனும், இந்தியில் சல்மான் கான், அக்ஷய் குமார் ஆகியோருடனும் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றியுள்ளேன்.
ஸ்டண்ட் மாஸ்டரான பிறகு தொடர்ந்து சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த எனக்கு இயக்குனர் விஜய் மில்டன், கோலி சோடா 2ல் சீமைராஜா என்ற ஜாதி சங்க தலைவர் கதாபாத்திரத்தை கொடுத்தார். அந்த கதாபாத்திரத்தில் நான் நடித்த பிறகு எனக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. சண்டை இயக்குனராக பணியாற்றுவதுடன் தொடர்ந்த நடிக்கவும் முடிவு செய்திருக்கிறேன். என்கிறார் ஸ்டண்ட் சிவா.