ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கடந்த சில மாதங்களாகவே தெலுங்கு சினிமாவில் ஸ்ரீரெட்டி ஆரம்பித்து வைத்த பாலியல் சர்ச்சை விவாகரத்திற்கு பிறகு மேலும் சில திடுக்கிடும் சம்பவங்களும் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
அந்த வகையில், தெலுங்குப்பட தயாரிப்பாளர் ஒருவர் தனது மனைவியுடன் இணைந்து, தெலுங்கு நடிகைகளை அமெரிக்காவிற்கு அழைத்து சென்று பாலியல் தொழில் செய்து வந்ததாகவும், அதையடுத்து அவர் அமெரிக்க போலீசாரால் கைது செய்யப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின.
அந்த சம்பவத்திற்கு பிறகு தெலுங்கு நடிகைகள் சுற்றுலா பயணிகளாகவோ அல்லது படப்பிடிப்புகளுக்காகவோ அமெரிக்கா சென்றாலும் அங்குள்ள போலீசார் தவறான கண்ணோட்டத்திலேயே விசாரிக்கிறார்களாம்.
இந்த நிலையில், தான் நடித்து வரும் தெலுங்கு படப்பிடிப்புக்காக சமீபத்தில் அமெரிக்கா சென்றிருந்த நடிகை மெஹ்ரீன் பிர்ஜதாவிடம் அமெரிக்கா போலீசார் சந்தேகக்கண் கொண்டு துருவி துருவி விசாரித்தார்களாம். அதன்பிறகு படப்பிடிப்பு நடக்கும் விவரங்களை தெரிந்த பிறகு தான் அவரை விடுவித்தார்களாம்.
இந்த மெஹ்ரீன் பிர்ஜதா தமிழில், சுசீந்திரன் இயக்கிய நெஞ்சில் துணிவிருந்தால் படத்தில் நாயகியாக நடித்தவர். தற்போது நோட்டா என்ற படத்தில் நடித்து வருகிறார்.