இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
தமிழ் திரைப்படங்களை வெளியிடுவதை முறைப்படுத்த தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் சில விதிமுறைகளை வகுத்துள்ளது. அதன்படி ஒரு படம் தணிக்கை சான்றிதழ் வாங்கியதும் எந்த தேதியில் வெளியிட விருப்பம் என்று 3 தேதிகளுடன் தயாரிப்பாளர் சங்கத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
இதற்கென அமைக்கப்பட்டுள்ள வெளியீட்டு வரன்முறை குழு இதனை ஆய்வு செய்து இந்த தேதியில் வெளியிடலாம் என்று கடிதம் கொடுக்கும். அதன் பிறகே படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பை வெளியிட முடியும். அப்படி கடிதம் கொடுத்த படமான செம போத ஆகாதே படம் கூட தயாரிப்பாளர் சங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்கி ஒரு மாதம் தாமதாமாக வெளிவருகிறது.
இந்த நிலையில் சிவகார்த்திகேயன், சமந்தா நடிப்பில் பொன்ராம் இயக்கி உள்ள சீமராஜா வருகிற செப்டம்பர் 13ந் தேதி விநாயகர் சதுர்த்தியன்று வெளிவருகிறது என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. படத்தின் படப்பிடிப்புகள் நேற்றுதான் முடிவடைந்துள்ளது.
இதற்கு பிறகு டப்பிங், பின்னணி இசை கோர்ப்பு, எட்டிட்டிங் உள்ளிட்ட பணிகள் இருக்கிறது. அதன் பிறகு தணிக்கை சான்றிதழ் பெற்று, தயாரிப்பாளர் சங்கத்தில் விண்ணப்பித்து அதன் பிறகே வெளியீட்டு தேதியை அறிவிக்க முடியும். ஆனால் விதிகளுக்கு முரணாக சீமராஜா பட வெளியீடு அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதே தேதியில் தனுஷ் நடித்துள்ள வடசென்னை படம் வெளிவருகிறது.
சிவகார்த்திகேயனை சினிமாவில் அறிமுகப்படுத்தியது தனுஷ் தான் என்றாலும் சமீபகாலமாக இருவருக்கும் கருத்துவேறு ஏற்பட்டிருப்பது ஊரறிந்த ரகசியம். இந்த நிலையில் இருவர் படமும் ஒரே தேதியில் வெளிவர இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தயாரிப்பாளர் சங்க விதிமுறைகளை மீறி தேதி அறிவித்த தனது படமான இரும்புத்திரையின் அறிவிப்பையை வாபஸ் பெற வைத்தவர் விஷால். அவர் சீமராஜா விஷயத்தில் என்ன நடவடிக்கை எடுப்பார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.