டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
சினிமாவில் 15 ஆண்டுகளாக முன்னணி நடிகையாக வலம் வருகிறார் த்ரிஷா. தற்போதும் கைவசம் அரை டஜன் படங்கள் வைத்திருக்கிறார். இவற்றில் மோகினி உள்ளிட்ட சில படங்கள் ரிலீஸ்க்கு தயாராகிவிட்டன. த்ரிஷா, தனிமையை அதிகம் விரும்புவாராம்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது... நம்மை சந்திக்கும் அனைவருமே நண்பர்களாகி விடுவதில்லை. சிலர் மட்டுமே நண்பர்கள் ஆவார்கள். என்றாலும், இந்த காலத்தில் யாரையும் நம்பி விட முடியவில்லை. என்னைப் பொறுத்தவரை எனக்கு நானே நண்பன் என்றாகி விட்டேன். இதுதான் எனக்கு எப்போதும் பாதுகாப்பானது என்று கருதுகிறேன்.
அதோடு மனதுக்கு அழுத்தம் கொடுக்கக்கூடிய பிரச்சினைகள் வரும்போது தனிமையைத்தான் விரும்புவேன். எதற்காக பிரச்னை வந்தது என்று எனக்குள்ளேயே கேட்டு என்னை பரிசோதனை செய்து கொள்வேன்.