ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மூடர்கூடம் படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர் நவீன். அந்தப் படம் சிறு பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு கவனம் ஈர்த்த படம். அதன் பிறகு நவீன் தயாரித்த படம் கொளஞ்சி. சமுத்திரக்கனி, சங்கவி, ராஜாஜி. நைனா சர்வார் நடித்துள்ளனர், நட்ராஜன் சங்கரன் இசை அமைத்துள்ளார், விஜயன் முனுசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். படம் முடிந்து 2 ஆண்டுகளாகியும் இன்னும் வெளிவரவில்லை. தயாரிப்பாளருக்கும், இயக்குனருக்கும் இடையே உள்ள மோதல் தான் படம் வெளிவராததற்கு காரணம் என்கிறார்கள்.
படத்தை வாங்கியவர் 2 கோடியே 75 லட்சத்தில் நவீனுக்கு ஒரு கோடி மட்டும் கொடுத்திருப்பதாகவும், மீதி பணத்தை தராமலும், படத்தை வெளியிடாமலும் வாங்கியவர் மெத்தனம் காட்டி வருவதாகவும் நவீன் தரப்பு தெரிவிக்கிறது. இப்படி மோதல்கள் மற்றும் பணப்பிரச்சினையால் படம் வெளிவர முடியாமல் முடங்கி கிடப்பதாக கூறப்படுகிறது.