தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழில் சிலகாலம் அஞ்சலியின் மார்க்கெட் சரிந்து கிடந்த நிலையில், தற்போது மீண்டும் புதிய படங்களில் கமிட்டாகி பிசியான நடிகையாகிக் கொண்டிருக்கிறார். அந்த வகையில், விஜய் ஆண்டனியுனுடன் நடித்த காளி படத்தை அடுத்து நாடோடிகள்-2, பேரன்பு, காண்பது பொய், லிசா மற்றும் விஜய் சேதுபதியுடன் ஒரு படம் என அரை டஜன் படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், 2014-ல் தெலுங்கில் கீதாஞ்சலி என்ற ஹாரர் படத்தில் நடித்தார் அஞ்சலி. அந்த படத்திற்காக அவருக்கு சிறந்த நடிகை விருது கிடைத்தது. தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் தொடங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதிலும் அஞ்சலி தான் லீடு ரோலில் நடிக்கிறாராம்.
இந்த படத்தில் அஞ்சலிக்கு ஜோடியாக காமெடியன் ஸ்ரீனிவாச ரெட்டி முதல் பாகத்தில் நடித்திருந்தார். ஆனால் இரண்டாம் பாகத்தில் அவருக்கு பதிலாக வேறு நடிகர் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.