600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா |
பாகுபலி நாயகன் பிரபாஸ், தற்போது சாஹோ படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ரத்தா கபூர் நடிக்கிறார். மேலும், பாகுபலிக்குப்பிறகு பிரபாசுடன் நடிக்க இந்திய அளவில் உள்ள பல முன்னணி நடிகைகளும் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
இந்த நிலையில், இந்தியில் தனுஷ் நடித்த ராஞ்ஜனா உள்பட பல படங்களில் நடித்துள்ள நடிகை ஸ்வரா பாஸ்கரும் பிரபாசுடன் நடிக்க வேண்டும் என்பது தனது கனவு என்று தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் ஐதராபாத்துக்கு வந்த இவர் மீடியாக்களை சந்தித்தார் அப்போது, பிரபாஸ் என்னை கவர்ந்த நடிகர். அதனால் அவர் படத்தில் நடிக்க வேண்டும் என்பது எனது கனவாக உள்ளது என்று கூறிய ஸ்வரா பாஸ்கர், நான் இந்தி படங்களில் நடித்து வந்தபோதும் எனது தந்தை ஆந்திராவைச் சேர்ந்தவர் தான் என்றும் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.