ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
விஜய் சேதுபதி நடிப்பில் சீனுராமசாமி இயக்கிய படம் தர்மதுரை. அந்தப்படத்தில் ஒரு மருத்துவராக நடித்திருந்தார் தமன்னா. அதையடுத்து, இப்போது உதயநிதி ஸ்டாலினை வைத்து, தான் இயக்கி வரும் "கண்ணே கலைமானே" படத்திலும் தமன்னாவை நடிக்க வைத்திருக்கிறார் சீனுராமசாமி.
இந்நிலையில் ஒரு பேட்டியில் தமன்னா கூறுகையில், சீனுராமசாமிக்கும், எனக்குமிடையே ஒரு நல்ல புரிதல் உள்ளது. அவர் எப்போது நடிக்க அழைத்தாலும் நடிப்பேன் என்று கூறியிருந்தார்.
அதையடுத்து தற்போது தமன்னாவின் நடிப்பு குறித்து இயக்குனர் சீனுராமசாமி கூறும்போது, இந்த கண்ணே கலைமானே படத்தில் தமன்னாவுக்கு சோழவந்தான் வாடிப்பட்டி வங்கி அதிகாரி வேடம். அவரது நடிப்பு ஒரு பூ உதிர்ந்து நதியில் விழுவது போல் இருக்கும். அந்த அளவுக்கு நுட்பமான நடிப்பாலும் தன் மவுன பார்வையாலும் படத்திற்கு அவர் பெரும் பலம் சேர்த்துள்ளார்.
அதோடு ஒரு கதாபாத்திரம் நிஜமாகும் தருணம் என்பது ஒரு குழந்தையைப் பெற்றுக்கொள்வது போன்றது. அதன் வலி அந்த தாய்க்குத்தான் தெரியும். அப்படி என் கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்த தமன்னாவுக்கு நன்றி என்று சீனுராமசாமி தெரிவித்துள்ளார்.