வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
பிரபல தெலுங்கு நடிகை ரேணு தேசாய். தமிழில், ஜேம்ஸ்பாண்ட் என்ற படத்தில் நடித்தார். தெலுங்கில் நடிக்கும்போது உடன் நடித்த நடிகர் பவன் கல்யாணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 4 வருடங்கள் சந்தோஷமாக சென்ற அவர்கள் வாழ்க்கையில் விரிசல் விழுந்தது.
கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2013ம் ஆண்டு விவாகரத்து செய்து கொண்டார்கள். பவன் கல்யாண், ரேணு தேசாய் தம்பதிகளுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். ஐதராபாத்தில் வசித்து வந்த ரேணு தேசாய் விவாகரத்துக்கு பிறகு சொந்த ஊரான புனேவில் செட்டிலானார்.
தற்போது ரேணு தேசாய் 2வது திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். அவர் ஒருவரை காதலிப்பதையும், விரைவில் அவரை திருமணம் செய்ய இருப்பதையும் மறைமுகமாக வெளியிட்டிருக்கிறார். தனது இன்ஸ்ட்ராகிராமில் ஒரு ஆணின் கையுடன் தன் கையை இணைத்து ஒரு படம் வெளியிட்டுள்ளார்.
அதில், “நான் தவறான இடங்களில் அன்பை தேடினேன். இப்போது அன்பான காதலை, உண்மையான வார்த்தைகள், அர்த்தமுள்ள சைகைகள், நேர்மையான செயல்கள் மூலம் கண்டு பிடித்து விட்டேன்.” என்று கருத்து பதிவிட்டிருக்கிறார்.
அந்த ஆணின் கையில் தாமரை பச்சை குத்தப்பட்டுள்ளது. அதை வைத்து அவர் யார் என்கிற ஆய்வில் இறங்கியிருக்கிறார்கள் ரசிகர்கள்.