இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
ஆடம்பரக் காரில் இருந்தபடி சாலையில் குப்பையை வீசியவரை, இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலியின் மனைவியும் நடிகையுமான அனுஷ்கா சர்மா கண்டிக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
காரில் சென்றவாறு ஒருவர் குப்பையை தூக்கி வீசுவதைக் கண்ட அனுஷ்கா சர்மா, சாலையில் குப்பையை வீச வேண்டாம் என அறிவுறுத்தியதுடன், அந்த நபரைக் கண்டித்தார். இந்த காட்சியை அனுஷ்காவிற்கு தெரியாமல், அவரின் பின்னால் இருந்து தனது மொபைல் போனில் வீடியோ எடுத்துள்ளார் கோலி.
இந்த வீடியோ காட்சியை தனது டுவிட்டர் பக்கத்திலும் பதிவிட்டுள்ள விராட் கோலி, இதுபோன்ற நபர்களா நாட்டை தூய்மையாக வைத்திருக்கப் போகிறார்கள் என்று ஆவேசத்துடன் கூறியுள்ளார்.