மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் |
நடிகை கஸ்தூரிக்கு சினிமா வாய்ப்புகள் எதுவும் பெரியதாக இல்லை. என்றாலும் அடிக்கடி சர்ச்சை கருத்துக்களை கூறி தன்னை லைம் லைட்டிலேயே வைத்துக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு தொடர்பாக தனது கருத்தை டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். இதில் திருநங்கைகள் பற்றியும் குறிப்பிட்டிருந்தார். அவர்களின் படத்தையும் வெளியிட்டிருந்தார். அந்த கருத்து-க்கு திருநங்கைகள் அமைப்பு மற்றும் பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் வரவே தனது கருத்துக்காக மன்னிப்பு கேட்ட கஸ்தூரி, அந்த பதிவையும் நீக்கி விட்டார்.
இந்த நிலையில் நேற்று சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கஸ்தூரி வீட்டு முன் திரு நங்கைகள் திரண்டு வந்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அவர்கள் கஸ்தூரியை கடுமையாக விமர்சித்து கோஷம் எழுப்பினார்கள், இந்த போராட்டத்தில் திருநங்கைகள் கையில் துடைப்பம், செருப்புடன் கலந்து கொண்டனர். பின்னர் விரைந்து வந்த போலீசார் திருநங்கைகளை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.