புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ |
சமீபத்தில் தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்தவர்களையும், இறந்தவர்களின் குடும்பத்தினரையும் ரஜினி சந்தித்து ஆறுதல் கூறினார். அவர்களுக்கு நிதி உதவியும் வழங்கினார். அதைத் தொடர்ந்து அங்கு பேட்டி அளித்த ரஜினி, தூத்துக்குடி போராட்டத்தின் கடைசி நாளில் சமூக விரோதிகள் புகுந்து விட்டனர். அதனால்தான் துப்பாக்கி சூடு நடந்தது என்று கூறினார். இந்த கருத்து பலவாறு விமர்சிக்கப்பட்டது. தற்போது ரஜினி தூத்துக்குடியில் போராடிய மக்களை சமூக விரோதிகள் என்கிறார், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒசூரைச் சேர்ந்த சிலம்பரசன் என்ற சமூக ஆர்வலர் அங்குள்ள போலீசில் புகார் அளித்துள்ளார். அவர் தனது புகார் மனுவில் கூறியிருப்பதாவது:
தூத்துக்குடிக்கு சென்ற நடிகர் ரஜினிகாந்த் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அகிம்சை வழியில் போராடி உயிர் தியாகம் செய்து, போலீசாரின் துப்பாக்கி சூட்டிற்கு பலியான 13 பேர் பற்றி எதிர்மறையான கருத்துகளை தெரிவித்துள்ளார். போராட்டக்காரர்களுடன் சமூக விரோதிகள் ஊடுருவியதால் கலவரம் ஏற்பட்டது என்று கூறி, துப்பாக்கி சூட்டில் பலியான 13 பேரும் சமூக விரோதிகள் என மறைமுகமாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் பொய்யான கருத்தை மக்களிடம் பரப்பி உள்ளார். போராடினால் உயிர் பலி ஆகி விடும் என்பது போன்ற கருத்தை அவர் மக்களிடம் உருவாக்கி உள்ளார்.
ஒட்டு மொத்த தமிழக மக்களின் உணர்வுகளையும், உரிமைகளையும் தியாகங்களையும் கொச்சைப்படுத்தும் வகையில் அவர் பேசி இருக்கிறார். தொடர்ந்து போராட்டம் நடத்தினால் தமிழ்நாடு சுடுகாடு ஆகி விடும் என்றும் அவர் கூறி இருக்கிறார். மக்களின் போராட்டங்களை கொச்சைப்படுத்தும் வகையில் பேசிய அவர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. புகார் மனுவை போலீசார் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டனர்.