டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
கிண்டல் செய்கிறேன் பேர்வழி என பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில் எதையாவது பதிவிட்டு, சிலர் வம்பில் மாட்டி கொள்வார்கள். இதில் அடிக்கடி சிக்குபவர் நடிகை கஸ்தூரி. அப்படித்தான், 18 எம்எல்ஏ.,க்களின் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கில் நேற்று நீதிபதிகள் மாறுப்பட்ட கருத்தை தெரிவித்ததால் மூன்றாவது அமர்வு நீதிபதிக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக டுவிட்டரில் கருத்து பதிவிட்ட நடிகை கஸ்தூரி, "இரு வேறுபட்டு தீர்ப்பு சொல்லிட்டாங்களாமே. 18-ஐ பிரித்து ஆளுக்கு ஒம்போதா? ஆஆங்!" எனக் குறிப்பிட்டு, இரு திருநங்கைகளின் போட்டோவையும் இணைத்திருந்தார்.
இது திருநங்கைகளை அவமதிக்கும் வகையில் உள்ளது என பலர் சமூக வலைதளங்களில் கண்டனங்களை பதிவு செய்ய, முதலில் அந்த போட்டோவை டுவிட்டரிலிருந்து நீக்கியவர், பின்னர் அந்த பதிவையே முழுவதுமாக நீக்கினார். அதோடு தனது பதிவிற்கு டுவிட்டரில் மன்னிப்பும் கோரியுள்ளார்.
அதில், ஸ்டாண்ட் அப் என்று ஒரு வகை உண்டு. கொஞ்சம் எல்லைகளை வளைக்கும் காமெடி அது. பொறுப்பற்ற காமெடி தான், அது தான் அதன் சிறப்பே. இவ்வகை லொள்ளுகள் சிரிக்க மட்டுமே, அறிக்கைகள் அல்ல. ஸ்ரீதேவி - சன்னி லியோன் பற்றி நான் பார்வேர்டு செய்த கமெண்டும், இன்று நான் போட்ட கமெண்டும் அவ்வகையை சேர்ந்தவை.
இது போன்ற குறும்பும், தெனாவட்டும் கலந்த கமெண்டுகளை அடிக்க கண்டிப்பாக எனக்கு இந்த இடம் உகந்ததல்ல என்று புரிந்தது. இங்கு பகடி செய்வதில் கூட பாகுபாடு உள்ளது. சிலரை மட்டுமே அடிக்கலாம். யார் மனதையும் புண்படுத்தியிருந்தால் மனதில் ஆழத்தில் இருந்து மன்னிக்க வேண்டுகிறேன்.
இவ்வாறு கஸ்தூரி பதிவிட்டுள்ளார்.