நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' |
கிண்டல் செய்கிறேன் பேர்வழி என பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில் எதையாவது பதிவிட்டு, சிலர் வம்பில் மாட்டி கொள்வார்கள். இதில் அடிக்கடி சிக்குபவர் நடிகை கஸ்தூரி. அப்படித்தான், 18 எம்எல்ஏ.,க்களின் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கில் நேற்று நீதிபதிகள் மாறுப்பட்ட கருத்தை தெரிவித்ததால் மூன்றாவது அமர்வு நீதிபதிக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக டுவிட்டரில் கருத்து பதிவிட்ட நடிகை கஸ்தூரி, "இரு வேறுபட்டு தீர்ப்பு சொல்லிட்டாங்களாமே. 18-ஐ பிரித்து ஆளுக்கு ஒம்போதா? ஆஆங்!" எனக் குறிப்பிட்டு, இரு திருநங்கைகளின் போட்டோவையும் இணைத்திருந்தார்.
இது திருநங்கைகளை அவமதிக்கும் வகையில் உள்ளது என பலர் சமூக வலைதளங்களில் கண்டனங்களை பதிவு செய்ய, முதலில் அந்த போட்டோவை டுவிட்டரிலிருந்து நீக்கியவர், பின்னர் அந்த பதிவையே முழுவதுமாக நீக்கினார். அதோடு தனது பதிவிற்கு டுவிட்டரில் மன்னிப்பும் கோரியுள்ளார்.
அதில், ஸ்டாண்ட் அப் என்று ஒரு வகை உண்டு. கொஞ்சம் எல்லைகளை வளைக்கும் காமெடி அது. பொறுப்பற்ற காமெடி தான், அது தான் அதன் சிறப்பே. இவ்வகை லொள்ளுகள் சிரிக்க மட்டுமே, அறிக்கைகள் அல்ல. ஸ்ரீதேவி - சன்னி லியோன் பற்றி நான் பார்வேர்டு செய்த கமெண்டும், இன்று நான் போட்ட கமெண்டும் அவ்வகையை சேர்ந்தவை.
இது போன்ற குறும்பும், தெனாவட்டும் கலந்த கமெண்டுகளை அடிக்க கண்டிப்பாக எனக்கு இந்த இடம் உகந்ததல்ல என்று புரிந்தது. இங்கு பகடி செய்வதில் கூட பாகுபாடு உள்ளது. சிலரை மட்டுமே அடிக்கலாம். யார் மனதையும் புண்படுத்தியிருந்தால் மனதில் ஆழத்தில் இருந்து மன்னிக்க வேண்டுகிறேன்.
இவ்வாறு கஸ்தூரி பதிவிட்டுள்ளார்.