'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல், தமிழகத்தின் அனைத்துப் பிரச்னைகளுக்காகவும் குரல் கொடுத்து வந்தார். தூத்துக்குடிக்குச் சென்று, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்திய அவர், காவிரி பிரச்னையில் வித்தியாசமாக எதையாவது செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தார்.
அதற்காக, கர்நாடகத்தின் புதிய முதல்வர் குமாரசாமியை நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது, காவிரி பிரச்னையை இரு மாநில முதல்வர்களும் அமர்ந்து பேசி தீர்வு காண வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், துவக்கத்தில் இருந்து பிரச்னையை ஆரம்பிக்கச் சொல்வது போல, பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்று சொல்லி, மொத்த பிரச்னையையும் கமல் குழப்பி விட்டார் என்று, சமூக வலைதளங்களில் பலரும் கமலை வறுத்தெடுத்தனர்.
விளம்பரத்துக்காக இப்படி செய்கிறார் என்றும் கடும் விமர்சனம் கிளம்பியது. இதனால், பொதுப் பிரச்னை குறித்து வேகமாக பேசுவதை குறைத்துக் கொள்ள கமல் முடிவெடுத்துள்ளதாக அவரது கட்சியினர் கூறுகின்றனர்.