தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தென்னிந்தியத் திரையுலகத்தில் 80களில் குறிப்பிட்ட நாயகியாக வலம் வந்தவர் சுகாசினி மணிரத்னம். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல முக்கியமான படங்களில் நடித்தவர். தற்போது அம்மா கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
தெலுங்கில் தற்போது இரண்டு முக்கியமான பயோபிக் படங்கள் உருவாகி வருகிறது. ஆந்திராவின் முன்னாள் முதல்வர்களான என்டிஆர், ஒய்எஸ்ஆர் ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றுப் படங்கள் தயாராகி வருகின்றன. இதில் ஒய்எஸ்ஆர் வாழ்க்கை வரலாற்றுப் படத்திற்கு 'யாத்ரா' எனப் பெயர் வைத்திருக்கிறார்கள். ஒய்எஸ்ஆர் ஆக மலையாள நடிகர் மம்முட்டி நடிக்கிறார். அவரது மனைவியாக 'பாகுபலி' படத்தில் அனுஷ்காவின் அம்மாவாக நடித்த அஸ்ரிதா வெமுகந்தி நடிக்கிறார்.
படத்தில் மற்றொரு முக்கிய கதாபாத்திரமான சபிதா இந்திரா ரெட்டி என்ற கதாபாத்திரத்தில் நடிக்க சுகாசினி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாராம். ஒய்எஸ்ஆர் அமைச்சரவையில் ஆந்திராவின் முதல் பெண் உள்துறை அமைச்சராக இருந்தவர் சபிதா.
'யாத்ரா' படத்தை மகி வி ராகவ் இயக்குகிறார். ஒய்எஸ்ஆர் மகன் ஜெகன்மோகன் ரெட்டி கதாபாத்திரத்தில் யார் நடிக்கப் போகிறார் என்பதுதான் இன்னும் முடிவாகாமல் உள்ளது.