ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு |
தமிழ் சினிமாவில் கடந்த 15 ஆண்டுகளாக முன்னணி நடிகையாக இருப்பவர் த்ரிஷா. இவர் கடந்த 2010-11-ம் நிதியாண்டில் ரூ.89 லட்சம் வருமானம் ஈட்டியதாக, வருமானவரித்துறையில் கணக்கு தாக்கல் செய்தார். ஆனால், த்ரிஷா ரூ.3.52 கோடி வருமானம் ஈட்டியதாக வருமானவரித்துறை கூறியது. தவறான கணக்கு காண்பித்து வரி ஏய்ப்பு செய்ததாக த்ரிஷாவிற்கு ரூ.1.16 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.
இதை எதிர்த்து த்ரிஷா, சென்னையில் வருமானவரித்துறை மேல் முறையீட்டு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார். இதில் த்ரிஷாவுக்கு விதிக்கப்பட்ட அபராதம் ரத்து செய்யப்பட்டது. இதை எதிர்த்து வருமான வரித்துறை, சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, ஏற்கனவே தீர்ப்பாயம் கொடுத்த அபாராதம் ரத்து செய்யப்பட்ட தீர்ப்பையே ஐகோர்ட்டும் உறுதி செய்தது.