ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கேரளா பாக்ஸ் ஆபீஸை கலக்கி எடுத்தவர் கவர்ச்சி நடிகை ஷகீலா. மம்மூட்டி, மோகன்லால் படங்களுக்கே இவரது படங்கள் சவால் விட்டன. சமீபகாலமாக கேரக்டர் நடிகையாக நடித்து வரும் அவர், தெலுங்கில் படங்களில் தொடர்ந்து வாய்ப்புகள் பெற்று வருகிறார்.
தற்போது தெலுங்கில் ஸ்ரீராம் தாசரி இயக்கத்தில் "சீலாவதி" என்ற படத்தில் நடித்துள்ளார் ஷகீலா. இது அவரது 250-வது படமாகும். கேரளாவில் நடந்த சில பாலியல் குற்ற உண்மை சம்பவங்களை மையமாக வைத்து இந்த படம் தயாராகி உள்ளதாக கூறப்படுகிறது. இதில் ஷகீலாவும் ஒரு முக்கியமான ரோலில் நடித்து இருக்கிறார்.
இப்படம் சென்சாருக்கு சென்றபோது படத்தின் கதைக்கும், தலைப்பும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் படம் சென்சார் ஆவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சென்சார்போர்டின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார் ஷகீலா. அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், படத்தை பார்க்காமலேயே வெறுமென தலைப்பை மட்டுமே காரணம் காட்டி தணிக்கை குழு தடை விதித்து இருப்பது சரியானது அல்ல. இந்த படத்துக்கு மக்கள் ஆதரவு கிடைக்கும் என நம்புகிறேன் என கூறியுள்ளார்.