ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் தீபிகா படுகோன், மும்பையில் உள்ள வோர்லி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வருகிறார். இன்று மதியம் திடீரென அந்த அபார்ட்மென்ட்டில் தீப்பிடித்தது.. ஆனாலும் தீப்பிடித்தது கிட்டத்தட்ட அபார்ட்மென்ட்டில் உச்சிப்பகுதியில் இருக்கும் 33-வது தளம் என்பதால் கீழே உள்ள பிளாட்டுகளுக்கு தீ அவ்வளவாக பரவவில்லை.
அதற்குள் தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணிக்கும் பணியில் ஈடுபட்டனர். இதுவரை கிட்டத்தட்ட நூறு பேர்களை அந்த தீப்பிடித்துள்ள பகுதியில் இருந்து காப்பாற்றியுள்ளனர். இன்னும் மீட்பு பணி தொடர்கிறது. இந்த அபார்ட்மென்ட்டில் தீபிகா படுகோனின் பிளாட் 26வது புளோரில் உள்ளது. அவர் தற்போது வெளிப்புற படப்பிடில் கலந்து கொண்டுள்ளார். நல்லவேளையாக இந்த விபத்தில் எந்த அசம்பாவிதமும் ஏற்படவில்லை என சொல்லப்படுகிறது.