'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் |
தெலுங்கு திரையுலகையே கடந்த சில மாதங்களாக பரபரப்பில் வைத்திருப்பவர் நடிகை ஸ்ரீரெட்டி.. தெலுங்கில் உள்ள முன்னணி நட்சத்திரங்கள், இயக்குனர்கள் மீது வாய்ப்பு வேண்டுமானால் படுக்கைக்கு அழைத்ததாக குற்றச்சாட்டுக்களை வீசி புகைச்சலை ஏற்படுத்தியுள்ளார். கடந்த சில நாட்களாக நடிகர் நானி மீது மிக கடுமையமாக பாலியல் குற்றசாட்டுகளை அடுக்கி வருகிறார் ஸ்ரீரெட்டி..
சமீபத்தில் ஐதராபாத்தில் நடைபெற்ற தனது அபிமன்யுடு படத்தின் சக்ஸஸ் மீட்டில் கலந்துகொண்ட விஷாலிடம், நானி, ஸ்ரீரெட்டி விவகாரம் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இது குறித்து பதிலளித்த விஷால், "திரையுலகில் இப்போது யார் வேண்டுமானாலும் ஒரு அலுவலகத்தை வாடகைக்கு எடுத்துக்கொண்டு தயாரிப்பு நிறுவனம் என்கிற பெயரில் நடிக்க ஆர்வமுள்ளவர்களை ஆடிசனுக்கு அழைக்க முடியும் சூழல் நிலவுகிறது..
ஸ்ரீரெட்டி தற்போது நானி மீது கூறியுள்ள குற்றசாட்டு மிக கொடூரமானது.. நானியை பற்றி நன்றாக எனக்கு தெரியும்.. இப்போது நானியின் பெயரை சொன்னவர் அடுத்ததாக இன்னொருவரை சுட்டிக்காட்டுவார். ஸ்ரீரெட்டி இந்த பெயர் விளையாட்டை இத்துடன் நிறுத்திவிட்டு, தன்னிடம் ஆதாரங்கள் இருந்தால் அதை வைத்து சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதை செய்யட்டும்" என சற்று கோபமாகவே கூறியுள்ளார் விஷால்.