‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
கடந்த வருடம், மலையாள நடிகை கடத்தல் வழக்கில் சிக்கி கைதானார் நடிகர் திலீப். இந்த வழக்கில் சிறைசென்று 83 நாட்கள் சிறைவாசத்திற்கு பிறகு ஜாமினில் வெளிவந்துள்ள நடிகர் திலீப், ஒரு பக்கம் படங்களில் நடித்துக்கொண்டே, இன்னொரு பக்கம் இந்த வழக்கிலிருந்து தன்னை முழுதும் வெளியே கொண்டுவர அல்லது தான் நிரபராதி என்பதை நிரூபிக்கும் விதமாக காய்களை நகர்த்தி வருகிறார்.
மேலும் இந்த வழக்கில் கேரள போலீசார் ஒருதலை பட்சமாகவே செயல்படுகிறார்கள் என்றும், நடிகை கடத்தப்பட்டபோது எடுக்கப்பட்டதாக சொல்லப்பட்டு கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்ட வீடியோவில் தனக்கு பல சந்தேகங்கள் இருப்பதாகவும் ஆரம்பத்தில் இருந்தே கூறி வருகிறார் திலீப்.
இந்தநிலையில் இந்த வழக்கு சரியான திசையில் செல்ல வேண்டுமென்றால் இதனை சிபிஐயை விசாரிக்க உத்தரவிட வேண்டும் என நீதிமன்றத்தில் கோரிக்கை மனு தாக்கல் செய்துள்ளார் திலீப்.