‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
கடந்த வருடம், மலையாள நடிகை கடத்தல் வழக்கில் சிக்கி கைதானார் நடிகர் திலீப். இந்த வழக்கில் சிறைசென்று 83 நாட்கள் சிறைவாசத்திற்கு பிறகு ஜாமினில் வெளிவந்துள்ள நடிகர் திலீப், ஒரு பக்கம் படங்களில் நடித்துக்கொண்டே, இன்னொரு பக்கம் இந்த வழக்கிலிருந்து தன்னை முழுதும் வெளியே கொண்டுவர அல்லது தான் நிரபராதி என்பதை நிரூபிக்கும் விதமாக காய்களை நகர்த்தி வருகிறார்.
மேலும் இந்த வழக்கில் கேரள போலீசார் ஒருதலை பட்சமாகவே செயல்படுகிறார்கள் என்றும், நடிகை கடத்தப்பட்டபோது எடுக்கப்பட்டதாக சொல்லப்பட்டு கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்ட வீடியோவில் தனக்கு பல சந்தேகங்கள் இருப்பதாகவும் ஆரம்பத்தில் இருந்தே கூறி வருகிறார் திலீப்.
இந்தநிலையில் இந்த வழக்கு சரியான திசையில் செல்ல வேண்டுமென்றால் இதனை சிபிஐயை விசாரிக்க உத்தரவிட வேண்டும் என நீதிமன்றத்தில் கோரிக்கை மனு தாக்கல் செய்துள்ளார் திலீப்.