பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தமிழ்த் திரையுலகத்தில் நடைபெறும் விழாக்களில் கலந்து கொள்வதற்கு மிகப் பொறுமை வேண்டும். இசை வெளியீட்டு விழா, டிரைலர் வெளியீட்டு விழா, பத்திரிகையாளர் சந்திப்பு என நடைபெறும் நிகழ்ச்சிகளில் ஒருவரை மற்றவர் புகழ்வதைக் கேட்பதற்குத்தான் அந்தப் பொறுமை வேண்டும். சில சமயங்களில் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குபவர்கள் அநியாயத்திற்கு மற்றவர்களைப் புகழ்ந்து தள்ளி அவர்களது இருப்பைக் காட்டிக் கொள்வார்கள்.
இரு தினங்களுக்கு முன்பு நடந்த 'ஆர்கே நகர்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இசையமைப்பாளர் அனிருத் கலந்து கொண்டு படத்தின் இசையை வெளியிட்டார். அப்போது பேசிய அவர் மேடையில் அமர்ந்திருந்த நடிகர் சிவா-வைப் பற்றி புகழ்ந்து தள்ளினார். அதிலும், அவரை ரஜினிகாந்த், அஜித் ஆகியோருக்கு அடுத்து ஒரு இடம் கொடுத்து புகழ்ந்தது எதற்கு என்றுதான் தெரியவில்லை
நிகழ்ச்சியில் பேசிய அனிருத், “சிவா சாருக்கு வந்து நான் மிகப் பெரிய ரசிகன். தியேட்டருக்கு போய் நான் கம்மியாதான் படம் பார்ப்பேன். 'தலைவர்' படம் பார்ப்பேன், 'தல' படம் பார்ப்பேன். அதுக்கப்புறம் சிவா படம்தான் பார்ப்பேன். இதை நான் மேடைக்காகச் சொல்லலை, உண்மையாவே சொல்றேன். ஒரு நடிகரா அவருடைய காமெடி எனக்கு ரொம்ப பிடிக்கும். 'வணக்கம் சென்னை' படத்துக்கு முன்னாடி இருந்தே சொல்றேன்,” என்றார்.
தமிழ்த் திரையுலகத்தில் தற்போதைய வசூல் நடிகர்களில் முதலிடத்தில் இருக்கும் விஜய்யைப் பற்றி அனிருத் சொல்லாமல் போனது ஆச்சரியமாக உள்ளது. விஜய் மீது அப்படி என்ன வெறுப்பு அனிருத்துக்கு ?.