துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் |
தமிழ்த் திரையுலகத்தில் நடைபெறும் விழாக்களில் கலந்து கொள்வதற்கு மிகப் பொறுமை வேண்டும். இசை வெளியீட்டு விழா, டிரைலர் வெளியீட்டு விழா, பத்திரிகையாளர் சந்திப்பு என நடைபெறும் நிகழ்ச்சிகளில் ஒருவரை மற்றவர் புகழ்வதைக் கேட்பதற்குத்தான் அந்தப் பொறுமை வேண்டும். சில சமயங்களில் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குபவர்கள் அநியாயத்திற்கு மற்றவர்களைப் புகழ்ந்து தள்ளி அவர்களது இருப்பைக் காட்டிக் கொள்வார்கள்.
இரு தினங்களுக்கு முன்பு நடந்த 'ஆர்கே நகர்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இசையமைப்பாளர் அனிருத் கலந்து கொண்டு படத்தின் இசையை வெளியிட்டார். அப்போது பேசிய அவர் மேடையில் அமர்ந்திருந்த நடிகர் சிவா-வைப் பற்றி புகழ்ந்து தள்ளினார். அதிலும், அவரை ரஜினிகாந்த், அஜித் ஆகியோருக்கு அடுத்து ஒரு இடம் கொடுத்து புகழ்ந்தது எதற்கு என்றுதான் தெரியவில்லை
நிகழ்ச்சியில் பேசிய அனிருத், “சிவா சாருக்கு வந்து நான் மிகப் பெரிய ரசிகன். தியேட்டருக்கு போய் நான் கம்மியாதான் படம் பார்ப்பேன். 'தலைவர்' படம் பார்ப்பேன், 'தல' படம் பார்ப்பேன். அதுக்கப்புறம் சிவா படம்தான் பார்ப்பேன். இதை நான் மேடைக்காகச் சொல்லலை, உண்மையாவே சொல்றேன். ஒரு நடிகரா அவருடைய காமெடி எனக்கு ரொம்ப பிடிக்கும். 'வணக்கம் சென்னை' படத்துக்கு முன்னாடி இருந்தே சொல்றேன்,” என்றார்.
தமிழ்த் திரையுலகத்தில் தற்போதைய வசூல் நடிகர்களில் முதலிடத்தில் இருக்கும் விஜய்யைப் பற்றி அனிருத் சொல்லாமல் போனது ஆச்சரியமாக உள்ளது. விஜய் மீது அப்படி என்ன வெறுப்பு அனிருத்துக்கு ?.