ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ருத்ரபாத் புரொடக்ஷ்ன்ஸ் சார்பில் ஆனந்தவேலு மற்றும் பிரகாஷ் சுப்பிரமணியம் தயாரிக்கும் படம் "பைபாஸ்". தேசிய விருது பெற்ற ஹிந்திப் படமான நியூட்டனில் தமிழ் பேசும் ராணுவ வீரனாக நடித்த ராம், ஹீரோவாக நடிக்கிறார்.
அனுராக் காஷ்யப்பின் கேங்ஸ் ஆப் வசிப்பூர், பிளாக் பிரைடே படங்களில் நடித்துள்ள முராரி குமார் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். இவர்கள் தவிர பிரதீப் நாயர், பிரயாஸ் ஆகியோரும் நடிக்கிறார்கள். தமிழ் மற்றும் ஹிந்தியில் தயாராகும் இந்தப் படத்தை அக்ஷ்ய் இயக்குகிறார். மார்டின் ஒளிப்பதிவு செய்கிறார். படம் பற்றி இயக்குனர் அக்ஷ்ய் கூறியதாவது:
தவறான வழியில் பணம் சம்பாதித்து பெரும் கோடீஸ்வரன் ஆன ஒருத்தன் கடைசியில் போலீசின் பிடிக்குள் வருகிறான். அங்கிருந்து தப்பும் அவன், உயிர் பிழைக்க மும்பையிலிருந்து காசிக்குத் தப்பிச் செல்கிறான். காசி அவனுடைய வாழ்க்கையை எப்படி மாற்றுகிறது என்பதுதான் படத்தின் கதை.
பணமே பிரதானம் என்று வாழும் சமூகம், மற்ற அனைத்தையும் இழந்து நிற்கிறது என்பதை சொல்லும் படம். காசியில் அகோரிகள் வாழும் பகுதிகளில் துணிச்சலுடன் சென்று படம் பிடித்திருக்கிறோம் என்கிறார் அக்ஷ்ய்.