'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ருத்ரபாத் புரொடக்ஷ்ன்ஸ் சார்பில் ஆனந்தவேலு மற்றும் பிரகாஷ் சுப்பிரமணியம் தயாரிக்கும் படம் "பைபாஸ்". தேசிய விருது பெற்ற ஹிந்திப் படமான நியூட்டனில் தமிழ் பேசும் ராணுவ வீரனாக நடித்த ராம், ஹீரோவாக நடிக்கிறார்.
அனுராக் காஷ்யப்பின் கேங்ஸ் ஆப் வசிப்பூர், பிளாக் பிரைடே படங்களில் நடித்துள்ள முராரி குமார் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். இவர்கள் தவிர பிரதீப் நாயர், பிரயாஸ் ஆகியோரும் நடிக்கிறார்கள். தமிழ் மற்றும் ஹிந்தியில் தயாராகும் இந்தப் படத்தை அக்ஷ்ய் இயக்குகிறார். மார்டின் ஒளிப்பதிவு செய்கிறார். படம் பற்றி இயக்குனர் அக்ஷ்ய் கூறியதாவது:
தவறான வழியில் பணம் சம்பாதித்து பெரும் கோடீஸ்வரன் ஆன ஒருத்தன் கடைசியில் போலீசின் பிடிக்குள் வருகிறான். அங்கிருந்து தப்பும் அவன், உயிர் பிழைக்க மும்பையிலிருந்து காசிக்குத் தப்பிச் செல்கிறான். காசி அவனுடைய வாழ்க்கையை எப்படி மாற்றுகிறது என்பதுதான் படத்தின் கதை.
பணமே பிரதானம் என்று வாழும் சமூகம், மற்ற அனைத்தையும் இழந்து நிற்கிறது என்பதை சொல்லும் படம். காசியில் அகோரிகள் வாழும் பகுதிகளில் துணிச்சலுடன் சென்று படம் பிடித்திருக்கிறோம் என்கிறார் அக்ஷ்ய்.