ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
கடந்த வருடம் கேரளாவில் நடிகை கடத்தல் வழக்கில் சிக்கி சிறைசென்று 83 நாட்கள் சிறைவாசத்திற்கு பிறகு ஜாமினில் வெளிவந்தார் நடிகர் திலீப். தொடர்ந்து தனது படங்களின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு வரும் திலீப், நீதிமன்றத்தின் அனுமதி பெற்று ஓரிரு முறை சில நிகழ்சசிகளுக்காக வெளிநாடுகளுக்கு சென்று வந்துள்ளார். அந்தவகையில் நீதிமன்றத்தில் இரண்டு கோரிக்கை மனுக்களை தாக்கல் செய்திருந்தார் திலீப்.
அதில் தான் நடிக்கவுள்ள புரபெஷர் டிங்கன் படத்தின் படப்பிடிப்புக்காக வெளிநாடு செல்ல அனுமதிக்க வேண்டும் என்பது உட்பட, சில நிபந்தனைகளை தளர்த்தும் விதமாக வைக்கப்பட்ட கோரிக்கை மனுவும் ஒன்று. ஆனால் தற்போது அந்தப்படத்தின் படப்பிடிப்பு துவங்க நீண்ட நாட்கள் ஆகும் என்பதால் அந்த கோரிக்கை மனுவை நீதிமன்றத்தில் இருந்து வாபஸ் பெற்றுள்ளார் திலீப்.