டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
ரஜினியின் காலா படத்தில் காமெடி கலந்த ஒரு கேரக்டரில் நடித்து ரசிகர்களின் கைதட்டல்களை பெற்றுள்ளார் இயக்குனர் சமுத்திரகனி. இந்த படத்தில் நடித்து வந்தபோது அவர் நடித்த இன்னொரு படம்தான் கோலிசோடா-2. இதுவரை புரட்சிகரமான, பாசிட்டீவான வேடங்களாக நடித்துள்ள அவர், இந்த படத்தில் முதன்முறையாக வாழ்க்கையில் தோல்விடைந்த ஒரு வேடத்தில் நடித்துள்ளார்.
இதுபற்றி சமுத்திரகனி கூறுகையில், எப்போதுமே பாசிட்டீவாக இருப்பது தான் எனக்கு பிடிக்கும். அந்தமாதிரி வேடங்களாகவே எனக்கு கிடைத்து வந்தன. ஆனால் முதன்முறையாக என்னை மாறுபட்ட ஒரு வேடத்தில் இந்த படத்தில் நடிக்க வைத்துள்ளார் விஜய் மில்டன். வாழ்க்கையில் தோல்வியடைந்த ஒரு கேரக்டரில் பர்பாமென்ஸ் செய்திருக்கிறேன். எனக்கு இது ஒரு மாறுபட்ட அனுபவமாகவே இருந்தது.
கவுதம் மேனன் இயக்கும் படத்தில் நடிக்க வேண்டும் என்பது எனது ஆசையாக இருந்து வந்தது. ஆனால், அந்த கவுதம் மேனனே கோலிசோடா-2 படத்தில் என்னுடன் இணைந்து நடித்தது எனக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. அந்த வகையில் இந்த படத்தில் வித்தியாசமான வேடம் என்பதோடு, கவுதம் மேனனுடன் நடித்ததும் ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது என்கிறார் சமுத்திரகனி.