கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி |
தெலுங்கு சினிமாவில் நடிகைகளுக்கு நிகழும் பாலியல் தொல்லை பற்றி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறி, அவர்களின் பெயர்களை அம்பலப்படுத்தி பரபரப்பு ஏற்படுத்தியவர் ஸ்ரீரெட்டி இவர் வெளியிட்ட திரை பிரபலங்கள் பட்டியலில் நடிகர் நானியின் பெயரும் இடம் பெற்றிருந்தது.
இந்நிலையில், தெலுங்கு பிக்பாஸ் சீசன்-2 நிகழ்ச்சியை தற்போது நானி தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீரெட்டியின் பெயரும் இடம் பெற்றிருந்தது. ஆனால், ஸ்ரீரெட்டி இந்த நிகழ்ச்சியில் இருந்தால் நான் தொகுத்து வழங்க மாட்டேன் என்று நானி கூறியதாகவும், அதனால் இப்போது ஸ்ரீரெட்டியை அந்த நிகழ்ச்சியில் இருந்து நீக்கி விட்டதாகவும் கூறப்படுகிறது.
இதன்காரணமாக நானி - ஸ்ரீரெட்டி மோதல் மீண்டும் வலுவடைந்திருக்கிறது. நானி தன்னுடன் படுக்கையை பகிர்ந்து கொண்டது உண்மை. அப்படி இல்லையென்றால் அவர் தனது குடும்பத்தின் மீதும், சினிமா தொழில் மீதும் சத்யம் செய்வாரா? என்றும் கேள்வி எழுப்பி மோசமான கமண்ட் ஒன்றையும் தனது பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். அதோடு, தான் நானி மீது பாலியல் புகார் சொன்னதால் தனக்கு வரும் வாய்ப்புகளை அவர் வர விடாமல் செய்வதாகவும் புகார் அளித்துள்ளார்.
ஸ்ரீரெட்டியின் இந்த புகாரில் உண்மை இல்லை. பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களை தேர்வு செய்வதில் நான் தலையிடவும் இல்லை என்று ஸ்ரீரெட்டியின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார் நானி. பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு இதுபோன்ற விஷயங்களுக்கு நான் எந்த பதிலும் சொல்லப்போவது இல்லை. தன் மீது அவதூறு பரப்பிய ஸ்ரீரெட்டி மன்னிப்பு கேட்காவிட்டால் அவர் மீது சட்ட ரீதியாக வழக்கு தொடருவேன் என நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்.