ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மகாநதி படத்தை தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் விஜய் ஜோடியாக நடித்து வருகிறார். இன்னும் பெயர் வைக்கப்படாத இந்தப் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். இதன் படப்படிப்புகள் விரைவில் அமெரிக்காவில் நடக்க இருக்கிறது. கடந்த சில மாதங்களாக சென்னையில் படப்படிப்பு நடந்தபோது எடுக்கப்பட்ட சில படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.
அதில் ஒரு படத்தில் படப்பிடிப்பு இடைவெளியில் விஜய்யும், கீர்த்தியும் ரிலாக்சாக அமர்ந்திருக்கிறார்கள். கீர்த்தி சுரேஷ் ஷோபாவில் அமர்ந்திருக்க, அவருக்கு சிகை அலங்கா நிபுணர் சிகை அலங்காரம் செய்து கொண்டிருக்கிறார். அவருக்கு எதிரில் தரையில் அமர்ந்திருக்கிறார் விஜய். இது சாதாரண விஷயம் தான். படப்பிடிப்பில் விஜய் எளிமையாக இருப்பார் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அந்தப்படத்தில் இன்னொரு முக்கியமான விஷயம் கவனிக்கப்படுகிறது. விஜய்யின் காலை தனது காலால் மிதித்தபடி அமர்ந்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.
இது ரொமான்ட்டிக் காட்சிக்கான ரிகர்சலாக கூட இருந்திருக்கலாம். ஆனால் இதைப்பார்த்த விஜய்யின் அதிதீவிர ரசிகர்கள் சிலர், விஜய்யை எப்படி கீர்த்தி மிதிக்கலாம் என சமூகவலைதளங்களில் கிண்டல் மற்றும் வசை பாடி வருகின்றனர்.