ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் நடித்துள்ள படம் டிராபிக் ராமசாமி. இது தனிமனிதனாக போராடி வரும் டிராபிக் ராமசாமியின் வாழ்க்கை வரலாறாகும். இதில் டிராபிக் ராமசாமியாக எஸ்.ஏ.சந்திரசேகர் நடித்துள்ளார். அவரது மனைவியாக ரோகினி நடித்துள்ளார்.
பிரகாஷ்ராஜ், சீமான், குஷ்பூ, ஆர்.கே.சுரேஷ், அம்பிகா, உபாசனா, கஸ்தூரி, மனோபாலா, மதன் பாப், லிவிங்ஸ்டன், இமான் அண்ணாச்சி, மோகன்ராம், சேத்தன், தரணி, அம்மு ராமச்சந்திரன், பசி சத்யா என்று பலரும் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் விஜய் ஆண்டனியும், விஜய் சேதுபதியும் சிறப்பு வேடத்தில் நடித்துள்ளார். குகன் எஸ்.பழனி, ஒளிப்பதிவு செய்திருக்கிறார். பாலமுரளி பாலு இசை அமைத்துள்ளார். கிரீன் சிக்னல் நிறுவனம் தயாரித்துள்ளது.
தமிழில் பல மனிதர்களின் வரலாற்று படங்கள் வெளிவந்திருக்கிறது. ஆனாலும் ஒருவர் வாழும்போதே அவரைப் பற்றி வெளிந்திருக்கும் முதல் படம் இது தான் என்கிறார்கள். இந்தப்படம் சமீபத்தில் விநியோகஸ்தர்களுக்கு சிறப்பு காட்சியாக திரையிடப்பட்டது. படம் முடிந்ததும் அனைவரும் எழுந்து நின்று கைதட்டி பாராட்டியிருக்கிறார்கள். இதுகுறித்து படத்தின் இயக்குனர் விக்கி கூறியதாவது:
வினியோகஸ்தர்கள் ஒரு படத்தை ப்ரிவியூ அரங்கில் பார்த்துவிட்டு கைதட்டி வரவேற்பது இது முதல் முறை என்று எண்ணுகிறேன். இப்பாராட்டு சுயநலமில்லாத ஒரு உண்மையான போராளியான டிராபிக் ராமசாமியின் துணிச்சலான வாழ்விற்கு கிடைத்ததாகவே நாங்கள் கருதுகிறோம். தயாரிப்பாளர் சங்கம் இப்பட வெளியீட்டு தேதியாக ஜூன் 22 கொடுத்துள்ளதால் கூடுதல் பூரிப்பில் உள்ளோம். விஜய் அண்ணனுடைய தந்தையை வைத்து நான் இயக்கியுள்ள படம் அவரின் பிறந்த நாளில் வெளியாவதற்கு இறைவனுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். இதை விட ஒரு ரசிகனுக்கு என்ன வேண்டும் என்றார்.