டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
2006-ல் கேடி படத்தில் தமிழுக்கு வந்தவர் தமன்னா. அதில் இருந்து இப்போது வரை கடந்த 12 ஆண்டுகளாக அவர் பிசியாக நடித்துக்கொண்டிருக்கிறார். தற்போது அவர், கண்ணே கலைமானே என்ற தமிழ் படத்திலும், சைரா நரசிம்ம ரெட்டி, மகாலட்சுமி ஆகிய தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.
தமன்னா வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், கடந்த 12 ஆண்டுகளாக சினிமாவில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறேன். ஓய்வு என்பதே எடுக்கவில்லை. என்னைத்தேடி வந்த எல்லா படங்களையும் ஏற்றுக்கொண்டு வந்திருக்கிறேன்.
இனிமேல் எனக்கு பிடித்தமான படங்களில் மட்டுமே நடிக்கப்போகிறேன். ஒரு படத்திற்கும் இன்னொரு படத்திற்குமிடையே இடைவெளி கொடுக்கப் போகிறேன். காரணம், எனக்கு சற்று ஓய்வு தேவைப்படுகிறது என்று கூறியுள்ளார் தமன்னா.