பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
அன்னக்கொடி, நினைத்தது யாரோ, திரைக்கு வராத கதை என சில படங்களில் நடித்தவர் சுபிக்ஷா. ஆனால் அதன்பிறகு விஜய் மில்டன் இயக்கிய கடுகு படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்தார். இந்த வேடம்தான் அவருக்கு பெயர் வாங்கிக் கொடுத்தது. அதனால் தற்போது கடுகு சுபிக்ஷா என்று அவர் அழைக்கப்பட்டு வருகிறார்.
இந்நிலையில், தற்போது விஜய் மில்டன் இயக்கியுள்ள கோலி சோடா-2 படத்தில் கடுகு படத்தை விட ஒரு பெரிய வேடத்தில் நடித்திருப்பதாக சொல்கிறார் சுபிக்ஷா.
அதுகுறித்து அவர் கூறுகையில், விஜய் மில்டன் இயக்கிய கடுகு படத்தில் சிறிய வேடம் என்றபோதும் தயங்காமல் நடித்தேன். ஆனால் அந்த வேடம்தான் என்னை தமிழ் சினிமாவில் அடையாளப்படுத்தியது. அதையடுத்து இப்போது கோலிசோடா-2 படத்திலும் எனக்கு ஒரு நல்ல வேடம் கொடுத்துள்ளார்.
முதல் படத்தில் நடித்த பாரத் சீனிக்கு ஜோடியாகவே இந்த கோலிசோடா-2 படத்திலும் நடித்துள்ளேன். அதோடு இன்னும் அழுத்தமான நடிப்பை கொடுத்திருக்கிறேன். அதனால் கோலிசோடா-2 தமிழ் சினிமாவில் எனக்கு ஒரு அழுத்தமான இடத்தை பிடித்துக்கொடுக்கும் என்று எதிர்பார்க்கிறேன் என்கிறார் சுபிக்ஷா.