'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பிரபல கன்னட நடிகர் துனியா விஜய், பரபரப்புக்கு பெயர் போனவர். அடிக்கடி சர்ச்சையில் சிக்குவார். அப்படி ஒரு சர்ச்சைதான் போலீஸ் தேடி வந்த கன்னட தயாரிப்பாளர் சுந்தரை அவர் தப்பிக்க வைத்தது.
கடந்த ஆண்டு தயாரிப்பாளர் சுந்தர் தயாரித்த ஒரு படத்தின் படப்பிடிப்பின்போது அணையில் இருந்து தவறி விழுந்து 2 துணை நடிகர்கள் இறந்தனர். இது தொடர்பாக தயாரிப்பாளர் சுந்தர் மீது அனுமதியின்றி படப்பிடிப்பு நடத்தியது, நடிகர்களுக்கு இன்சூரன்ஸ் எடுக்காதது உள்ளிட்ட பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அவரை கைது செய்ய சுந்தரின் வீட்டுக்கு சென்றபோது அங்கே இருந்த நடிகர் துனியா விஜய், போலீசாரின் கவனத்தை திசை திருப்பி சுந்தரை தப்பிக்க வைத்தார்.
அதன்பிறகு போலீசார் அரசு ஊழியரை பணிசெய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட சில பிரிவின் கீழ் துனியா விஜய் மீது வழக்கு தொடர்ந்து அவரையும் தேடி வந்தனர், அவர் தலைமறைவானர். இந்த நிலையில் துனியா விஜய், கோவையில் தனது நண்பர் வீட்டில் தங்கி இருப்பதாக பெங்களூரு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் விரைந்து வந்து கோவையில் தலைமறைவாக இருந்த துனியா விஜய்யை கைது செய்து பெங்களூர் அழைத்துச் சென்றனர்.