இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி |
மாநகரம், நெஞ்சில் துணிவிருந்தால், மாயவன் ஆகிய படங்களில் நடித்தும் சந்தீப் கிஷனுக்கு தமிழில் மார்கெட் சூடுபிடிக்கவில்லை. ஆனாலும் தமிழில் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்.
கார்த்திக் நரேன் இயக்கும் நரகாசூரன் படம் சந்தீப்கிஷன் நடிப்பில் அடுத்து வெளியாகவிருக்கிறது. நரகாசூரன் படத்தை அடுத்து சூப்பர் நேச்சுரல் த்ரில்லர் படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார் சந்தீப் கிஷன். இந்த படத்தை கார்த்திக் ராஜு இயக்குகிறார். இவர் ஏற்கனவே திருடன் போலீஸ், உள்குத்து ஆகிய படங்களை இயக்கியவர்.
எஸ்.எஸ்.தமன் இசையமைக்கும் இந்தப்படத்துக்கு, பி.எஸ்.வர்மா ஒளிப்பதி செய்கிறார். இந்த படத்தில் நடிக்க இருக்கும் மற்ற நடிகர் நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது.
சந்தீப்கிஷன் ஹீரோ என்பதால் இந்தப் படத்தை தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் உருவாக்க திட்டமிட்டுள்ளனர். தெலுங்குப்பதிப்பை தானே வாங்கிக் கொள்வதாக உறுதியளித்துள்ளாராம் சந்தீப் கிஷன்.