தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கேரளாவைச் சேர்ந்தவர் ஷார்மிளா. கிழக்கே வரும் பாட்டு, நல்லதொரு குடும்பம், முஸ்தபா, மனேச மவுனமா உள்பட பல படங்களில் நடித்தார். தற்போது சின்ன சின்ன வேடங்களில் நடித்து வருகிறார். மலையாள படம் ஒன்றில் நடிக்க கேரளா சென்றுள்ள ஷார்மிளா, அங்கு அளித்த ஒரு பேட்டியில், வாழ்க்கையில் எல்லாவற்றையும் இழந்து விட்டு மிகவும் கஷ்டப்படுகிறேன். எனக்கு நடிக்க வாய்ப்பு தாருங்கள் என்று உருக்கமாக கூறியிருக்கிறார். மேலும் அவர் கூறியிருப்பதாவது:
எதிர்பாராத சம்பவங்கள் என் வாழ்க்கையில் நடந்து விட்டன. இப்போது என்னிடம் பணம் இல்லை. ஆரோக்கியத்தையும் இழந்து விட்டேன். இந்த மாதிரி விஷயங்கள் என் வாழ்க்கையில் முன்பே நடந்து இருந்தால் தற்கொலை செய்து இருப்பேன். ஆனால், இப்போது சாக முடியாது. படுக்கையில் இருக்கும் எனது தாயாரை கவனிக்க வேண்டி உள்ளது. மகன் நலனும் முக்கியம். அதனால் தற்கொலை முடிவை எடுக்கவில்லை. எனது கஷ்டம் மகனுக்கு வரக்கூடாது என்று நினைக்கிறேன். ஒரு காலத்தில் நிறைய படங்களில் நடித்தேன். இப்போது வாய்ப்பு கேட்டால் யாரும் தரத் தயாராக இல்லை. எனக்கும், நடிக்க வாய்ப்பு கொடுங்கள் எல்லோரிடமும் கேட்டுக் கொள்கிறேன்.
எதிர்காலத்துக்காக பணம் சேர்க்காமல் இருந்தது நான் செய்த பெரிய தவறு. சினிமாவில் மும்முரமாக நடித்தபோது ஆடம்பரமாக வாழ்ந்தேன். திருமணத்துக்கு பிறகு வாழ்க்கை தலைகீழாக மாறியது. எனது வீட்டையும் நிலத்தையும் விற்க வைத்தனர். நான் செய்த பெரிய தவறு வீட்டை விற்றது தான். அந்த வீடுதான் எனக்கு தன்னம்பிக்கையை கொடுத்தது. இப்போது எல்லாவற்றையும் இழந்து நிற்கிறேன் என்கிறார் ஷார்மிளா கூறினார்.