'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ரஜினி நடித்த காலா திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. இந்தப் படம் திருட்டு விசிடியிலோ, அல்லது சட்டவிரோதமாக இணையதளங்களிலோ வெளிவரக்கூடாது என்று தயாரிப்பாளர் சங்கமும், படத்தின் தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் நிறுவனமும், வெளியீட்டு நிறுவனமான லைக்காவும் கடும் நடவடிக்கை எடுத்தது. அதன் காரணமாக சிங்கப்பூரில் காலா படத்தை தியேட்டரிலிருந்தே லைவ் செய்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில் நேற்று புதுப்படங்களை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடும் இரண்டு முக்கிய நிறுவனங்களில் ஒன்றில் காலா படம் வெளியிடப்பட்டது. இது நேற்று காலை 8 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளது. அது தியேட்டரில் செல்போனில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ரசிகர்கள் ரஜினி வரும் காட்சியில் தீபாரதனை காட்டும் காட்சியும் இடம்பெற்றுள்ளது. அதனால் இது ரசிகர் மன்றத்தின் சிறப்பு காட்சியில் எடுக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.
திரையின் பக்கவாட்டில் தெரியும் அடையாளங்களை வைத்து அது எந்த தியேட்டரில் எடுக்கப்பட்டது என்பதை தயாரிப்பாளர் சங்கத்தின சைபர் க்ரைம் பிரிவு தீவிரமாக தேடி வருகிறது. இன்று அல்லது நாளை தியேட்டர் கண்டுபிடிக்கப்பட்டு, படம் பிடித்தவரையும் கண்டு பிடித்து விடுவோம் என்கிறது தயாரிப்பாளர் சங்க வட்டாரம். இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட லிங்க் பேஸ்புக், வாட்ஸ்அப் மூலம் வேகமாக பரவியது. இது திரையுலகினர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.