ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
திரையுலகில், சில விசித்திரமான சம்பவங்கள், எப்போதாவது நடக்கும். இப்போதும், அப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது. 2014ல், நிமிர்ந்து நில் என்ற பெயரில், ஜெயம் ரவி, அமலா பால் நடிப்பில், ஒரு படம் வெளிவந்தது. ஊழலுக்கு எதிரான கதையம்சம் உடைய இந்த படம், ஜன்தா பாய் கபிராஜு என்ற பெயரில், தெலுங்கில், 2015ல், 'ரீ மேக்' செய்யப்பட்டது.
இதில், நானியும், அமலா பாலும் நடித்திருந்தனர். தெலுங்கில் இந்த படம், நல்ல வசூலை குவித்தது. தற்போது, நானிக்கு, தமிழிலும் ரசிகர்கள் உருவாகியுள்ளனர். இதை பயன்படுத்தி, ஜன்தா பாய் கபிராஜு படத்தை, வேலன் எட்டுத் திக்கும் என்ற பெயரில், தமிழில், 'டப்பிங்' செய்து வெளியிடுகின்றனர்.