ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
இயக்குனர் பேரரசுவிடம் உதவியாளராக இருந்தவர் முரபாசெலன். இப்போது அவர் இயக்குனராக புரமோஷனாகி என்ன தவம் செய்தேனோ என்ற படத்தை இயக்கி உள்ளார். இதனை இணைந்த கைகள் கலைக்கூடம் சார்பில் எஸ்.செந்தில்குமார் தயாரிக்கிறார்.
கஜினி முருகன், விஷ்ணுப்பரியா என்ற புதுமுகங்களுடன் பவர் ஸ்டார் சீனிவாசன், ரிஷா, சிங்கம்புலி, ஆர்த்தி, ஆர்.என்.ஆர்.மனோகரன் நடித்துள்ளனர். நவுஷாத் ஒளிப்பதிவு செய்துள்ளார், தேவ்குரு இசை அமைத்துள்ளார்.
"ஒரு செல்வாக்கு மிக்க அரசியல்வாதியின் மகளை சைக்கிளில் குச்சி ஐஸ் விற்கும் வாலிபன் காதலிப்பதும். அதனால் வரும் பிரச்சினைளும் தான் கதை. பலம் கொண்ட யானை மாதிரியான வில்லனை சின்ன கட்டெறும்பான ஹீரோ எப்படி தனது புத்தி சாதுர்யாத்தால் வெல்கிறான் என்பது திரைக்கதை. படப்பிடிப்புகள் முடிந்து டப்பிங், பின்னணி இசை கோர்ப்பு பணிகள் நடந்து வருகிறது. இந்த மாத இறுதியில் படம் வெளிவருகிறது" என்றார் இயக்குனர் முரபாசெலன்.