வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
காவிரி விவகாரத்தில், கர்நாடக முதல்வர் குமாரசாமியை, நடிகரும், மக்கள் நீதி மையம் தலைவருமான கமல், நேரில் சந்தித்து பேசினார். இதற்காக, விவசாய சங்கங்களை சேர்ந்தவர்கள் கமலை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். கமலுக்கு வீரவாள், ஏர் கலப்பையை பரிசாக வழங்கினர்.
கமல் பேசியதாவது, விவசாயிகளுக்கு நன்றி கடனை தீர்க்கவே கர்நாடகா சென்றேன். இருமாநில விவசாயிகள் கூடி பேசினால், அரசியல்வாதிகள் யாரும் உள்ளே நுழைய முடியாது. நான் யார் என கேட்கிறார்கள்? நான், ஆயிரத்தில் ஒருவன் அல்ல, ஏழரை கோடியில் ஒருவன்.
'காலா' படத்திற்கு தடை என, அறிவித்து விட்டனர். 'விஸ்வரூபம் 2' படத்திற்கும் தடை என, கூறியுள்ளனர். விவசாய பிரச்னையை பேசி தீர்ப்பது போல, அதையும் வியாபாரிகள் பேசித் தீர்ப்பர். நல்லது செய்ய, யார் வேண்டுமானாலும் வரலாம். அதற்கு வயது தடையில்லை.
எனக்கு வீரவாள் கொடுத்தனர்; அது, அறுவடைக்கு பயன்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.