தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள காலா படம் ஜூன்-7-ந்தேதி திரைக்கு வருகிறது. இந்நிலையில், சென்னையில் நடைபெற்ற அப்படத்தின் ஆடியோ விழாவில் கலந்து கொண்ட ரஜினி, நேற்றுமுன்தினம் ஐதராபாத்தில் நடைபெற்ற காலா படத்தின் பிரமோசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அப்போது தெலுங்கு திரைப்படத்துறையுடன் தனது தொடர்புகளை நினைவுபடுத்திய ரஜினிகாந்த், அதன்பிறகு காலா படம் குறித்து பேசினார்.
காலா படத்தை இரண்டு முறை பார்த்திருக்கிறேன். படம் நன்றாக வந்துள்ளது. இயக்குனர் பா.ரஞ்சித் தனது வர்த்தக முத்திரை பாணியில் இந்த படத்தை எடுத்துள்ளார். மேலும், வணிக ரீதியில் கலையுணர்வுடன் எடுக்கப்பட்டுள்ள காலா படத்தில் ஒரு முக்கியமான சமூக செய்தி உள்ளது.
ஆசியாவிலுள்ள மிகப்பெரிய சேரி, மும்பையிலுள்ள தாராவி பகுதியாகும். அங்கு வாழும் மக்களின் நிலையை இந்த படம் விளக்குகிறது.
இவ்வாறு காலா படம் குறித்து ரஜினி பேசியுள்ளார்.