ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை திருமணம் செய்து கொண்டுள்ள சமந்தா சினிமாவில் தொடர்ந்து நடித்து வருகிறார். மேலும், அவர் நாகசைதன்யாவை காதலிப்பதற்கு முன்பு, பாய்ஸ் சித்தார்த்தை காதலிப்பதாக செய்திகள் வெளியாகி வந்தன. பின்னர் அந்த காதல் முறிந்து போனதாக கூறப்பட்டது.
இந்த நிலையில், தற்போது தனக்கு திருமணமான நிலையில், தனது பழைய காதலைப்பற்றி ஒரு பேட்டியில் மனம் திறந்துள்ளார் சமந்தா.
அதுகுறித்து அவர் கூறுகையில், மகாநதி படத்தில் நடித்து வந்தபோது, அந்த படத்தின் கதை என் வாழ்க்கையில் நடந்தது போலவே உணர்ந்தேன். அதாவது நானும் ஒரு நடிகரை கண்மூடித்தனமாக காதலித்தேன். பின்னர் அவரை விட்டு பிரிந்து விட்டேன். அப்படி பிரியவில்லையென்றால் என் வாழ்க்கையும் சாவித்ரி வாழ்க்கை போலாகியிருக்கும். எனது நல்ல நேரம்தான் நாக சைதன்யாவை சந்தித்தேன் என்று அந்த பேட்டியில் சமந்தா தெரிவித்துள்ளார்.
ஆனால் தான் முதலில் காதலித்த அந்த நடிகர் யார் என்பதை சமந்தா வெளிப்படையாக சொல்லாததால், அவரது இணைய பக்கத்தை தொடர்பு கொண்டு ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.