டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தமிழில் கிடைத்ததைப் போன்றதொரு வெற்றி தெலுங்கிலும் கிடைத்திருப்பதால் தயாரிப்பாளர், நடிகர் விஷால் மிகவும் மகிழ்ச்சியில் இருக்கிறார். தமிழில் வெளியான 'இரும்புத்திரை' படம் சுமார் 40 கோடி வசூலைக் கடந்திருக்கும் என்கிறார்கள்.
தெலுங்கில் 'அபிமன்யுடு' என்ற பெயரில் டப்பிங் ஆகி, கடந்த வாரம் வெளியானது. அங்கு அதே தினத்தில் வெளியான நேரடித் தெலுங்குப் படங்களை விட 'அபிமன்யுடு' படத்திற்கு நல்ல ஓபனிங் கிடைத்து முதல் நாளே 3.5 கோடி வசூலானதாகத் தகவல் வெளியானது. அடுத்த இரண்டு நாட்களும் விடுமுறை தினமாக இருந்ததால் அதே அளவிலான வசூல் இருந்திருக்கிறது. முதல் வார இறுதியில் 10 கோடி வசூலை 'அபிமன்யு' கடந்திருக்கிறது. தமிழ், தெலுங்கு என இரு மொழி வசூலையும் சேர்த்து இப்போது 50 கோடி வசூலைப் பெற்றிருக்கிறது.
இந்தப் படத்தின் வெற்றி சமந்தாவிற்கு ஹாட்ரிக் வெற்றியைப் பெற்றுத் தந்திருக்கிறது. அவர் நடித்து இந்த வருடம் தெலுங்கில் வெளிவந்த 'ரங்கஸ்தலம், மகாநதி, அபிமன்யுடு' ஆகிய மூன்று படங்களுமே நல்ல வெற்றியைப் பெற்றுள்ளன. திருமணமான பின் ஒரு நாயகிக்கு இப்படி ஹாட்ரிக் வெற்றி கிடைப்பது இதுவே முதல் முறை.