600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா |
பிரபல தெலுங்கு இயக்குனர் கிரிஷ். வேதம், வானம், கப்பார் சிங் பேக், கவுதமி புத்ர சதகர்ணி, கிருஷ்ணம் வந்தே ஜெகத்குரும் உள்பட பல படங்களை இயக்கியவர். தற்போது கங்கனா ரணாவத் நடிப்பில் மணிகர்னிகா என்ற பெயரில் ஜான்சி ராணியின் வாழ்க்கையை ஹிந்தியில் இயக்கி வருகிறார். அடுத்து பாலகிருஷ்ணா நடிப்பில் என்.டி.ராமராவ் வாழ்க்கையை தெலுங்கில் இயக்க இருக்கிறார்.
கிரிஷ் தனது உறவுக்கார பெண் டாக்டர் ரம்யாவை 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்தார். இந்த நிலையில் கணவன், மனைவிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கிரிஷ் இயக்கிய கஞ்சே என்ற படத்தில் நடித்த நடிகை பிரக்யா ஜய்ஸ்வாலுக்கும், கிரிஷூக்கும் இருக்கும் நெருக்கமான தொடர்பே கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட காரணம் என்று கூறப்படுகிறது. இருவரையும் சமாதானப்படுத்த உறவினர்கள் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. இதனால் இருவரும் சட்டப்படி பரஸ்பரம் மனு செய்து விவாகரத்து செய்து கொள்ள இருக்கிறார்களாம்.