தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ரஜினி நடித்துள்ள காலா படம் வருகிற 7ம் தேதி வெளிவருகிறது. இந்த படத்திற்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் படத்தை தடை செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு நாடார் சங்கத்தின் தலைவர் ஜெ.முத்து ரமேஷ் தலைமையில் அதன் நிர்வாகிகள முதல்வரின் தனி பிரிவில் நேற்று மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:
மும்பை வரலாற்றில் பல சரித்திர சாதனைகளை படைத்த தமிழர், இன்றும் மும்பைவாழ் தமிழர்களால் பெரிதும் மதிக்கப்படுகின்ற 'குட்வாலா சேட்' என்று தமிழர்களால் அன்போடு அழைக்கப்படுகின்ற எஸ்.திரவிய நாடார் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தின் அடிப்படையில் 'காலா' படம் எடுக்கப்பட்டுள்ளது. எஸ்.திரவிய நாடாரின் புகழை இருட்டடிப்பு செய்யும் நோக்கத்தில் அவர் தமிழ் சமுதாயத்துக்கு செய்த சேவைகளை திரைக்கதையாக்கி இயக்குனர் பா.ரஞ்சித் சாதிய உள்நோக்கத்தோடு, கதை நாயகனை சாதியின் குறியீடாக மாற்றியுள்ளார் என சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது.
தென் மாவட்டங்களில் சினிமா எனும் சக்தி வாய்ந்த ஊடகங்களின் மூலம் சாதி மோதல்கள் ஏற்பட்டு பல துயர சம்பவங்கள் நடந்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு 'காலா' திரைப்படத்தில் எஸ்.திரவிய நாடார் வாழ்வில் நடந்த உண்மை சம்பவங்கள் இருக்கிறதா? என மறு தணிக்கைக்கு தமிழக அரசு உத்தரவிடவேண்டும். வருகிற 7-ந் தேதி வெளியாக உள்ள 'காலா' திரைப்படத்துக்கு தடை விதித்து சாதிய மோதல்கள் ஏற்படாத வகையில் தமிழக மக்களை காப்பாற்ற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.